முதல் 10 ஓவர்களில் தில்லி அணியைக் கட்டுப்படுத்திய ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் 10 ஓவர்களில் தில்லி அணியைக் கட்டுப்படுத்திய ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.

அபுதாபியில் தில்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நடைபெறுகிறது.

புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி, 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் ராஜஸ்தான் அணி  8 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன. இன்றிரவு ஷார்ஜாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் உலகின் நெ.1 டி20 பந்துவீச்சாளரான ஷம்சியும் டேவிட் மில்லரும் இடம்பெற்றுள்ளார்கள். தில்லி அணியில் ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக லலித் யாதவ் இடம்பெற்றுள்ளார். 
    
ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசியதால் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட முடியாமல் தில்லி வீரர்கள் தடுமாறினார்கள். ஷிகர் தவன் 8 ரன்களிலும் பிருத்வி ஷா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் பவர்பிளேயில் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்தது தில்லி.

10 ஓவர்களின் முடிவில் தில்லி அணி, 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 19, ஷ்ரேயஸ் ஐயர் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com