பாதுகாப்பு வளையத்திலிருந்து ஆர்சிபி முக்கிய வீரர் விலகல்: சிஎஸ்கே ஆட்டத்தில் விளையாடுவாரா?

​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு காரணமாக ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார்.
பாதுகாப்பு வளையத்திலிருந்து ஆர்சிபி முக்கிய வீரர் விலகல்: சிஎஸ்கே ஆட்டத்தில் விளையாடுவாரா?
Published on
Updated on
1 min read


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு காரணமாக ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் முடிவடைந்தவுடன் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த தகவல் ஹர்ஷல் படேலுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்துக்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார் என தகவலறிந்த ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹர்ஷல் படேல் 4 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 14.66. எகானமி 5.50. புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com