சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்த ஷிவம் டுபேவின் பந்துவீச்சை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னெள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னெள, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 50, ஷிவம் டுபே 49 ரன்கள் எடுத்தார்கள். அவேஷ் கான், பிஸ்னோய், டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடினமான இலக்கை நன்கு விரட்டிய லக்னெள அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராகுல் 40, குயிண்டன் டி காக் 61, எவின் லூயிஸ் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்கள்.
கடைசி இரு ஓவர்களை ஷிவம் டுபேவும் முகேஷ் செளத்ரியும் வீசியது லக்னெள அணிக்கு வசதியாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய டுபே, 25 ரன்களைக் கொடுத்தார். இதனால் சென்னையின் அணியின் முடிவுகளைப் பலரும் விமர்சித்துள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக முதல் இரு ஆட்டங்களில் தோற்றுள்ளது சிஎஸ்கே.
இந்நிலையில் 19-வது ஓவரில் மோசமாகப் பந்துவீசிய ஷிவம் டுபேவின் பந்துவீச்சைத் தொலைக்காட்சி வர்ணனையில் விமர்சனம் செய்தார் முன்னாள் வீரர் சுநீல் கவாஸ்கர். அவர் கூறியதாவது:
ஓரளவு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டுபே விளையாடியுள்ளார். இருந்தாலும் இன்னும் அவர் லென்த் பந்துகளை வீசிக்கொண்டிருக்கிறார். இந்தப் பந்துவீச்சுக்குக் கட்டாயம் தண்டனை உண்டு. அதேபோல இதுவரை பந்து வீசாதவரை அழைத்து வந்து 19-வது ஓவரை வீசச்சொன்னால் அது நியாயம் அல்ல. இந்தச் சமயத்தில் தான் அதிரடியாக விளையாட பேட்டர்கள் தயாராக உள்ளார்கள். டுபே மெதுவான பந்துகளையும் வீசுகிறார். ஆனால் அவ்வகைப் பந்துகள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் தான் உதவியாக இருக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தில் பந்து அழகாக பேட்டுக்கு வருகிறது. இங்கு அந்தப் பந்துவீச்சு எடுபடாது. கடைசியில் யார் பந்துவீச வேண்டும் என்கிற சிஎஸ்கேவின் கணக்கு தவறாகி விட்டது. பேட்டிங் ஆடுகளத்தில் லென்த் பந்துகளை வீசுகிறார் டுபே. அவர் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பது நிச்சயம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


