ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் ஷிவம் டுபே முதலிடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் ஷிவம் டுபே முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

பல முக்கிய பேட்டர்கள் உள்ள சிஎஸ்கே அணியில் புதிதாக உள்ளே நுழைந்த 28 வயது ஷிவம் டுபே, அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டுபேவுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் ஷிவம் டுபேவை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே. ஆல்ரவுண்டர் என்பதால் அவரைத் தேர்வு செய்தாலும் இதுவரை அவர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. ஆனால் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். 3 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 109 ரன்கள் எடுத்துள்ளார். 5 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் - 165.15.

ஐபிஎல் 2022 போட்டி: அதிக ரன்கள்

1. பட்லர் (ராஜஸ்தான்) - 135
2. இஷான் கிஷன் (மும்பை) - 135
3. ஷிவம் டுபே (சென்னை) - 109
4. லிவிங்ஸ்டன் (பஞ்சாப்) - 98
5. ரஸ்ஸல் (கொல்கத்தா) - 95

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com