ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி நான்கு ஓவர்களில் குறைந்த ரன்கள் கொடுத்த வீரராக பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் உள்ளார். அதேசமயம் ஆர்சிபி அணியின் சிராஜ் அதிக ரன்களை கொடுப்பதில் முன்னணியில் உள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. பெரும்பாலான ஆட்டங்களில் ஆட்ட முடிவை கடைசி ஓவர்களே நிர்ணயிக்கின்றன. ஆரம்பத்தில் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது அதிக ரன்கள் எடுத்த அணிகளே அதிகளவு வெற்றியைப் பெற்றுள்ளன.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஆட்டங்களில் 29 ஆட்டங்களின் முடிவில் இந்த வருடம் தான் கடைசி நான்கு ஓவர்களில் (17-20) அதிக ரன்களை பேட்டர்கள் எடுத்துள்ளார்கள். இந்த வருடக் கடைசி நான்கு ஓவர்களின் ரன்ரேட் - 11.53. அதாவது கடைசி நான்கு ஓவர்களில் சராசரியாக 47 ரன்களை அடித்துள்ளார்கள்.
ஐபிஎல் 2022: குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் (குறைந்தது நான்கு ஓவர்கள்)
அர்ஷ்தீப் சிங் - 5.25 எகானமி
நரைன்: 6.25
பிராவோ - 8.08
ஐபிஎல் 2022: அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் (குறைந்தது நான்கு ஓவர்கள்)
சிராஜ் - 16.00 எகானமி
ஜோர்டன் - 14.27
பிரசித் கிருஷ்ணா - 12.57