கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தமிழ் முறைப்படி திருமணம் செய்த மேக்ஸ்வெல்: சமூகவலைத்தளங்களில் வெளியான காணொலி

காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

News image

படம் - www.instagram.com/gmaxi_32/

Updated On :16 டிசம்பர் 2023, 1:14 pm IST

ஆஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்தார் மேக்ஸ்வெல். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்கள். 

இந்தியப் பெண்ணை மணந்த 2-வது ஆஸி. கிரிக்கெட் வீரர், மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆஸி. வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். 

இந்நிலையில் சென்னையில் மேக்ஸ்வெல் - வினி ராமன் இருவருக்கும் தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. தமிழ்த் திருமணங்களில் உள்ள மூன்று முறை மாலை மாற்றுதல் சடங்கில் மேக்ஸ்வெல்லும் வினி ராமனும் கலந்துகொண்ட காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. அடுத்தச் சில நாள்களில் அணியினருடன் அவர் இணையவுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.