தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மும்பையின் வெற்றிக்காக வேண்டிக்கொள்ளும் நான்கு அணிகள்!

சனிக்கிழமையன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன.

Published On :

சனிக்கிழமையன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் மட்டும் தில்லி வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி 16 புள்ளிகள் பெற்றுவிடும். பிளேஆஃப்புக்கும் தகுதி பெற்றுவிடும். அதேசமயம் நான்கு அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிடும். ஆம். ஒரே ஆட்டத்தின் முடிவால் நான்கு அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை இழக்கவுள்ளன. 

ஞாயிறன்று கடைசி லீக் ஆட்டமாக சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சனிக்கிழமை தில்லி வெற்றி பெற்றுவிட்டால் ஞாயிறன்று எந்த அணி வெற்றி பெற்றாலும் பிளேஆஃப்புக்குச் செல்ல முடியாது. ஏனெனில் சன்ரைசர்ஸ் - பஞ்சாப்  ஆகிய இரு அணிகளாலும் லீக் சுற்றின் முடிவில் அதிகபட்சமாக 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இப்போது ஏற்கெனவே மூன்று அணிகள் 16 மற்றும் அதற்கு அதிகமான புள்ளிகளைக் கொண்டுள்ளன. இதில் தில்லியும் 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகளின் கதை முடிந்ததாகிவிடும்.  

அதேபோல தில்லியின் வெற்றியால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாமல் வெளியேறி விடும். கேகேஆர் அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். ஆர்சிபி அணி கடைசி ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகளைப் பெற்றுவிடும். ஆனால் தில்லி அணியின் நெட்ரன்ரேட்டைத் தாண்டுவது கடினம். இதனால் ஆர்சிபிக்கும் தில்லி அணியின் வெற்றி சிரமத்தையே தரும். 

ஏற்கெனவே மும்பை, சென்னை அணிகளால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாது. இந்நிலையில் சனிக்கிழமையன்று நடைபெறும் மும்பை - தில்லி ஆட்டம் தான் நான்கு அணிகளின் தலைவிதியை நிர்ணயம் செய்யப் போகிறது. இந்த ஆட்டத்தில் மட்டும் மும்பை வெற்றி பெற்றுவிட்டால் சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, கேகேஆர் ஆகிய நான்கு அணிகளுக்கும் நிம்மதியாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.