புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடைசி வாரத்தில் புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :17 மே 2022, 6:30 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் போட்டியை ஐந்து முறை வென்ற மும்பை அணி, ஆகாஷ் மத்வால் என்கிற வீரரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளதாக மும்பை அணி விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே வலைப்பயிற்சிக்கான வீரர்களில் ஒருவராக ஆகாஷ் இருந்த நிலையில் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் அணியைச் சேர்ந்த 28 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், 2019 முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். 

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணி 12 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.