கடைசி வாரத்தில் புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. 
கடைசி வாரத்தில் புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் போட்டியை ஐந்து முறை வென்ற மும்பை அணி, ஆகாஷ் மத்வால் என்கிற வீரரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளதாக மும்பை அணி விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே வலைப்பயிற்சிக்கான வீரர்களில் ஒருவராக ஆகாஷ் இருந்த நிலையில் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் அணியைச் சேர்ந்த 28 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், 2019 முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். 

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணி 12 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com