ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி.
இதையடுத்து 2014-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று - தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூன்று பிரபலங்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் மூவரும் விளையாடாத 2-வது இறுதிச்சுற்று இது. 15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் மூவர் (தோனி - கோலி - ரோஹித்)
2008 - தோனி
2009 - ரோஹித் சர்மா, கோலி
2010 - தோனி
2011 - தோனி, கோலி
2012 - தோனி
2013 - தோனி, ரோஹித் சர்மா
2014 - கொல்கத்தாவும் பஞ்சாபும் மோதியதால் மூவரும் பங்கேற்கவில்லை
2015 - தோனி, ரோஹித் சர்மா
2016 - கோலி
2017 - தோனி, ரோஹித் சர்மா
2018 - தோனி
2019 - தோனி, ரோஹித் சர்மா
2020 - ரோஹித் சர்மா
2021 - தோனி
2022 - குஜராத்தும் ராஜஸ்தானும் மோதுவதால் மூவரும் பங்கேற்கவில்லை