12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் விரும்பத்தகாத சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

ரோஹித் சர்மா - படம் | ஐபிஎல்

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் விரும்பத்தகாத சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் மும்பை முதலில் பேட் செய்தது. மும்பை அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இன்றையப் போட்டியில் அவர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் விரும்பத்தகாத சாதனை ஒன்றை அவர் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரரான தினேஷ் கார்த்திக்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஐபிஎல் போட்டிகளில் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்

ரோஹித் சர்மா - 17 முறை

தினேஷ் கார்த்திக் - 17 முறை

கிளன் மேக்ஸ்வெல் - 15 முறை

பியூஸ் சாவ்லா - 15 முறை

மந்தீப் சிங் - 15 முறை

சுனில் நரைன் - 15 முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.