தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

16 வருடமாக ஆர்சிபி செய்யும் தவறு இதுதான்: அம்பத்தி ராயுடு விளாசல்!

ஆர்சிபி அணியின் தோல்விக்கான காரணத்தை குறித்து அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

News image

படங்கள், பிடிஐ, சிஎஸ்கே/ எக்ஸ்

Updated On :3 ஏப்ரல் 2024, 1:21 pm

DIN

ஆர்சிபி அணியின் தோல்விக்கான காரணத்தை குறித்து அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

4 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. கடந்த 15 வருடமாக விளையாடியும் ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தினால் விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலக டு பிளெஸ்ஸி கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போதும் ஆர்சிபியின் தோல்வி பயணம் முடியவில்லை.

இது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:

ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்கள் எப்போதுமே குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக ரன்களை வாரி வழங்குகிறார்கள். பேட்டர்களை குறைவான ரன்களையே அடிக்கிறார்கள். அழுத்தமான நேரங்களில் யார் பேட்டிங் செய்கிறார்கள்? இளம் இந்திய வீரர்களும் தினேஷ் கார்த்திக்கும்தான். இந்த ஐபிஎல் தொடரின் சர்வதேச வீரர்கள் அனைவரும் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் (ஓய்வறை) இருக்கிறார்கள்.

மஹிபால் லோம்ரோர் இம்பாக்ட் வீரராக களமிறங்கி 230 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தினால்தான் ஒரு போட்டியாவது ஆர்சிபி வென்றிருக்கிறது. அழுத்தமான சூழ்நிலைகளில் பெரிய வீரர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். 16 வருடமாக இதுதான் ஆர்சிபியின் கதை.

பவர்பிளேவில் எளிதாக ரன்களை அடிக்க முடியும். மூத்த வீரர்கள் அங்கு களமிறங்கி ரன்களை அடிப்பதில் பெரிய விசயமில்லை. அது எளிதானது. கேக்கின் மீதிருக்கும் கிரீமினை டாப் ஆர்டர்கள் சுவைத்து விட்டு மீதியை இளம் வீரர்களுக்கு அளிப்பதனாலயே ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் எடுத்துள்ளார் அம்பத்தி ராயுடு. ஒரு சதம், 22 அரைசதம் இதில் அடங்கும். தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு வெளிநாட்டு தொடர்களில் விளையாடி வருகிறார். அரசியலில் ஆர்வம் இருப்பதால் இனிவரும் காலங்களில் அரசியல் களத்தில் அவரை சந்திக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.