சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் பேசியது என்ன?

வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதியாக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

News image

ஸ்டீஃபன் பிளெமிங் - படம் | ஐபிஎல்

Updated On :6 ஏப்ரல் 2024, 4:10 pm IST

வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதியாக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் விளையாடிய முகேஷ் சௌத்ரி ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக முகேஷ் சௌத்ரியின் ஓவர் மாறியது.

இந்த நிலையில், வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதியாக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

Story image

படம் | ஐபிஎல்

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: முகேஷ் சௌத்ரியை அணியில் சேர்க்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. அவர் கடந்த காலங்களில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த நாள் அவருடைய நாளாக அமையவில்லை. ஆனால், இவையனைத்துமே ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியே. அணிக்காக புதிய ஹீரோக்களை தேடும் முயற்சியில் இதுபோல் நடைபெறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், சிஎஸ்கே வீரர்களின் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. வீரர்கள் அனைவரும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.