ஐபிஎல் தொடருக்கு முன்பு கடினமாக உழைத்ததால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாக சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியாக தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்பு கடினமாக உழைத்ததால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடினமாக உழைத்ததே சிறப்பாக விளையாடுவதற்கு காரணம். எனது அப்பா, யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். பந்துவீச்சின்போது ஆடுகளம் மெதுவாக இருப்பதை உணர்ந்தோம். அதனால் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என நினைத்தோம் என்றார்.
அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!

அதிவேக 100 சிக்ஸர்கள்... புதிய சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



