சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் ஷிகர் தவான் விளையாடமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவான் - படம் | ஐபிஎல்

Published On :25 ஏப்ரல் 2024, 7:56 pm IST

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் விளையாடமாட்டார் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கடைசியாக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடினார். அதன்பின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. அவர் அணியில் இல்லாதபோது சாம் கரண் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் விளையாடமாட்டார் எனவும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின்போது அணியில் இணைவார் எனவும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷிகர் தவான் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அவர் கடந்த மூன்று போட்டிகளில் இல்லாதது அணியின் பேட்டிங்குக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்றார்.

வருகிற மே 1 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.