பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
262 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ், பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங் சிங்கின் அதிரடியான ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் மொத்தமாக 523 ரன்கள் சேர்த்தன. நேற்றையப் போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சைத் தவிர கொல்கத்தா அணியின் அனைத்துப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டன.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.
போட்டி குறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தயவு செய்து யாராவது பந்துவீச்சாளர்களை காப்பற்றுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.