ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பிரபலமான ரசிகரை லக்னௌ அணி கௌரவித்துள்ளது.

News image

படங்கள்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் / எக்ஸ்

Updated On :3 மே 2024, 4:15 pm IST

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பிரபலமான ரசிகரை லக்னௌ அணி கௌரவித்துள்ளது.

செப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னௌ சிஎஸ்கே போட்டியில் லக்னௌ அணி வென்றது. அந்தப் போட்டியில் மஞ்சள் நிற கூட்டமான சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஒரேயொரு லக்னௌ அணி வீரராக கொண்டாடும் காட்சிகள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நபரின் பெயர் வெங்கடேஷ். அவர் கே.எல்.ராகுல் ரசிகர். அதனால் லக்னௌ அணிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.

லக்னௌ அணி அவரை அழைத்து கே.எல். ராகுலை சந்திக்க வைத்தது. மேலும் அவர் பேசிய விடியோவினையும் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது:

அதில் சேப்பாக்கம் மைதானமே அமைதியாக இருந்தது. 16 -20 ஓவர்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எந்த நாளை விடவும் அன்று மகிழ்ச்சியாக இருந்தேன். மஞ்சள் நிற அலைகளின் மத்தியில் நான் மட்டுமே லக்னௌ அணி ஜெர்ஸி அணிந்திருந்தேன். அன்று எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன.

மீம்ஸ்களால் நான் பிரபலமானேன். 1000 லக்னௌ ரசிகர்களுக்கு மத்தியில் நான் சிறப்பு விருந்திரானாக அழைக்கப்பட்டேன் போலிருந்தது. நான் என் கனவிலும் இப்படி எல்லாம் நடக்கும் என நினைத்தது இல்லை. அவரைச் சந்திக்கும் போது வார்த்தைகள் வரவில்லை. இப்போதும் கைகள் நடுங்குகின்றன. மறக்க முடியாத அனுபவம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.