திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :14 மே 2024, 6:37 pm IST

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையின்படி ஒரு அணி பிளேயிங் லெவனை தவிர்த்து கூடுதலாக ஒருவரை இம்பாக்ட் வீரராக களமிறக்கிக் கொள்ள முடியும். நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை மீது ரோஹித் சர்மா, அக்‌ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நீடிக்க வேண்டுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை இல்லையென்றால், அணிகள் குவிக்கும் ரன்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமா என்ற கேள்வியும் உள்ளது. இம்பாக்ட் வீரர் இல்லையென்றால், ஆட்டத்தில் அணிகள் குவிக்கும் ரன்கள் குறைந்து விடுமா என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லையென்றால், அணியின் ரன்கள் குறைந்துவிடும் என உறுதியாக கூறிவிட முடியாது. இம்பாக்ட் வீரர் விதிமுறையால் முன்வரிசை ஆட்டக்காரர்களுக்கு பலன் இருக்கிறது. ஆனால், இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லாவிட்டாலும், அவர்கள் அதிரடியாகவே விளையாடப் போகிறார்கள். ஜேக் ஃபிரேசர், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களை நிதானமாக விளையாடக் கூறினாலும், அது நடக்கப் போவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.