சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அனைத்து பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டியிருக்கும்: அஸ்வின்

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கப்படுவதற்கு இம்பாக்ட் பிளேயர் விதி காரணமில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News image

ரவிச்சந்திரன் அஸ்வின்

படம் | ஐபிஎல்

Updated On :23 மே 2024, 10:50 am

DIN

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கப்படுவதற்கு இம்பாக்ட் பிளேயர் விதி காரணமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 41 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 முறை 250 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியால் அதிகபட்ச ரன்கள் (287 ரன்கள்) குவிக்கப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்படுவது இம்பாக்ட் பிளேயர் விதியால் மட்டுமல்ல எனவும், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதால் அதிக ரன்கள் குவிக்கப்படுகிறது எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாவிட்டாலும், அதிக ரன்கள் குவிக்கப்படும். என்னைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறுவேன். அதேபோல ஆடுகளங்கள் தரமாக உள்ளன. எதிர்காலத்தில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டியிருக்கும். எவ்வளவு நன்றாக பந்துவீசினாலும், பந்துவீச்சாளர்கள் நன்றாக பேட்டிங் செய்யவும் வேண்டும். போட்டிகள் அவ்வாறுதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றன என்றார்.

நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.