மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரமன்தீப் சிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். 117 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் எட்டி கொல்கத்தாவை வீழ்த்தியது.
ரமன்தீப் சிங் கூறியதென்ன?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மும்பைக்கு எதிரான தோல்வி துரதிருஷ்டவசமானது எனவும், அடுத்து வரும் போட்டிகளில் ஒருபோதும் இவ்வாறு விளையாடமாட்டோம் எனவும் ரமன்தீப் சிங் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆட்டத்தின் சூழல் எவ்வாறு இருந்தாலும், எந்த ஒரு அணியும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறும்போது, பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மும்பைக்கு எதிரான போட்டி எங்களுக்கு துரதிருஷ்டவசமான போட்டியாக அமைந்துவிட்டது. இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை கொல்கத்தா அணி மீண்டும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் அடுத்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக நாளை மறுநாள் (ஏப்ரல் 3) விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?







