எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்திய பந்துவீச்சாளர்கள்: குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தியதாக அவர்களை அணியின் உதவிப் பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்.

News image

படம் |ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)

Updated On :10 ஏப்ரல் 2025, 4:28 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தியதாக அவர்களை அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு

நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தியதாக அவர்களை அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த மாதிரியான ஆடுகளத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அதற்கு முக்கிய காரணம் அனைத்து பந்துவீச்சாளர்களும் அவர்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தியதே ஆகும். சிராஜ் மிகவும் நன்றாக பந்துவீசினார். இந்த தொடர் முழுவதும் பிரசித் கிருஷ்ணா அற்புதமாக பந்துவீசி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அணியில் யாருக்கும் எந்த ஒரு சிறப்பான ரோலும் ஒதுக்கப்படவில்லை. அனைவரும் அணிக்காக அவர்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.