சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை பிடிக்கும்: பஞ்சாப் கிங்ஸ் வீரர்

ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் நேஹல் வதேரா மனம் திறந்துள்ளார்.

News image

ஸ்ரேயாஸ் ஐயர் - படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :11 ஏப்ரல் 2025, 4:31 pm IST

ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் நேஹல் வதேரா மனம் திறந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேஹல் வதேரா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவித்ததையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நேஹல் வதேரா 114 ரன்கள் குவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியதென்ன?

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் நேஹல் வதேரா, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் உடனடியாக எளிதில் பேசி பழகுகிறார். அந்த விஷயம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரிடம் உள்ள நம்பிக்கை என்னை வியப்படைய வைக்கிறது. அணியில் கேப்டன் இந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கும்போது, மற்ற வீரர்களும் நேர்மறையாக உணர்வார்கள்.

கடந்த காலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் கூட்டணி தில்லி அணிக்காக சிறப்பாக இருந்துள்ளது. அந்த கூட்டணி தற்போது சிறப்பாக தொடர்கிறது. ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து செயல்படுவது சிறப்பான உணர்வை கொடுக்கிறது. அவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு கிடைத்த வரம் போன்று உணர்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.