சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்கள்! வைரலாகும் மீம்ஸ்!

ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்களின் வைரல் மீம்ஸ் பற்றி..

News image

ரோஹித் சர்மா - ஹார்திக் பாண்டியா

Updated On :11 ஏப்ரல் 2025, 4:04 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கக் கோரி இணையதள ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடப்பு ஐபில் தொடரில் 5 முறை சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்திலும், சென்னை அணி 9-வது இடத்திலும் இருக்கின்றன.

சென்னை அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகியதால், மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கேப்டனாக இல்லாதபோதும்கூட சென்னை அணி கேப்டன் ருதுராஜை தோனி வழிநடத்தினார்.

அதேவேளையில் மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து பழைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆலோசனைகளையோ அவரின் தலைமையையோ யாரும் விரும்பவில்லை. மேலும், அவர் இம்பாக்ட் வீரராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்.

தோனி கேப்டனாக இல்லாதபோது சென்னை அணி 42 சதவிகிதப் போட்டிகளில் வென்றிருந்தாலும், மும்பை அணி ரோஹித் இல்லாதபோது வெறும் 26 சதவிகிதப் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இதனால், ஹார்திக் பாண்டியா தொடரிலிருந்து விலக வேண்டும் என்றும், அதற்கு பாண்டியா ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவே மீண்டும் கேப்டனாக வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.