திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்கள்! வைரலாகும் மீம்ஸ்!

ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்களின் வைரல் மீம்ஸ் பற்றி..

News image

ரோஹித் சர்மா - ஹார்திக் பாண்டியா

Updated On :11 ஏப்ரல் 2025, 4:04 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கக் கோரி இணையதள ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடப்பு ஐபில் தொடரில் 5 முறை சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்திலும், சென்னை அணி 9-வது இடத்திலும் இருக்கின்றன.

சென்னை அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகியதால், மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கேப்டனாக இல்லாதபோதும்கூட சென்னை அணி கேப்டன் ருதுராஜை தோனி வழிநடத்தினார்.

அதேவேளையில் மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து பழைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆலோசனைகளையோ அவரின் தலைமையையோ யாரும் விரும்பவில்லை. மேலும், அவர் இம்பாக்ட் வீரராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்.

தோனி கேப்டனாக இல்லாதபோது சென்னை அணி 42 சதவிகிதப் போட்டிகளில் வென்றிருந்தாலும், மும்பை அணி ரோஹித் இல்லாதபோது வெறும் 26 சதவிகிதப் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இதனால், ஹார்திக் பாண்டியா தொடரிலிருந்து விலக வேண்டும் என்றும், அதற்கு பாண்டியா ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவே மீண்டும் கேப்டனாக வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.