பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில்(பிஎஸ்எல்) இருந்து விலகி ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷுக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதேவேளையில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியும் இன்று தொடங்கவிருக்கிறது. ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் கார்பின் போஷை பெஷாவர் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால், ஒப்பந்தத்தை மீறிய போஷுக்கு ஒரு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்தாண்டு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு கார்பின் போஷும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன டேவிட் வார்னர், டேரில் மிட்செல், டிம் செஃபெய்ட், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேசன் ஹோல்டர், வாண்டர் துஸன் உள்ளிடோரும் பிஎஸ்எல் தொடரில் விளையாடவுள்ளனர்.
இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாகிறார் தோனி! ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தரப்பு டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு!

நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி, வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



