திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி! ஏன் தெரியுமா?

பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடுவது பற்றி...

News image

பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி வீரர்..

Updated On :13 ஏப்ரல் 2025, 7:01 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்ஸி அணித்து விளையாடுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் சுற்றுக்கான 28-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

காசு சுண்டுதலின் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பேசுகையில், “அதிக மரங்கள் நடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பச்சை நிற ஜெர்ஸி அணித்திருக்கிறோம்” என்றார்.

வழக்கமாக நீலம், சிவப்பு கலந்த சீருடையில் ஆர்சி அணி விளையாடும். ஆனால், இன்றையப் போட்டியில் அந்த அணியினர் பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடுகின்றனர்.

ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவது இது முதல் முறை அல்ல. 2011-லிருந்து, இந்த ஜெர்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற சீருடை அணிந்து விளையாடப்படுகிறது.

இந்த பச்சை நிற ஜெர்சி தேர்வுக்கு பின்னால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முன்னேற்பாடுகள் இருக்கின்றன. அதாவது, கோ கிரீன்(Go Green) என்று இயற்கையைக் காக்க அனைவரும் தனது வாழ்க்கையில் அதிக மரங்களை நடவேண்டும் என்பதை காட்டுவதே இதன் நோக்கம்.

மேலும், வீரர்களின் பச்சை நிற ஜெர்ஸிகூட மறுசுழற்சி செய்யப்பட்ட துணியால் செய்யப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை, 14 போட்டிகளில் பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடிய பெங்களூரு அணி, அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவற்றுள் ஒரு போட்டியில் முடிவில்லாமல் போனது. கடைசியாக பச்சை நிற ஜெர்ஸியுடன் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடியிருந்த ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.