வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். வெறும் 35 ஆயிரம் பேர்தான் நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்கள் மற்றும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகமும் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில், “பெங்களூருவில் நேற்று(ஜூன் 4) நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த சோகமான நேரத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆதரவாக ஆர்சிபி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் ரசிகர்கள் எங்களுடன் இருப்பார்கள். இந்தத் துக்கமான நேரத்திலும் ஒற்றுமையாக இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ð¢ð³ð³ð¶ð°ð¶ð®ð¹ ð¦ðð®ðð²ðºð²ð»ð: ð¥ð¼ðð®ð¹ ððµð®ð¹ð¹ð²ð»ð´ð²ð¿ð ðð²ð»ð´ð®ð¹ðð¿ð
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 5, 2025
The unfortunate incident in Bengaluru yesterday has caused a lot of anguish and pain to the RCB family. As a mark of respect and a gesture of solidarity, RCB has announced a financial⦠pic.twitter.com/C50WID1FEI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்ணீர் சிந்தியபடி பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்!

கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் - சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை







