11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

தோனியை விமர்சிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து...

News image

எம்.எஸ்.தோனி - படம்: பிடிஐ

Updated On :29 மார்ச் 2025, 11:16 am IST

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது. இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.

12.5ஆவது ஓவரில் அஸ்வின் தோனிக்கு முன்பாக களமிறங்கினார். இது கேப்டனா அல்லது பயிற்சியாளர் எடுத்த முடிவா தெரியவில்லை. ஆனால், இதற்காக தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களும் மிடில் ஆர்டர்களும் சொதப்பிவரும் நிலையில் தோனி மீதான விமர்சனம் பேசுபொருளாகியுள்ளது.

தோனி முன்னாடியே களமிறங்கியிருந்தால் சிஎஸ்கே வென்றிருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த முடிவுக்கு காரணம் யார் என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் இன்னும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

சில ரசிகர்கள் தோனியை இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம் என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.