
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வந்தன.
இந்த நிலையில், தர்மசாலா திடலில் விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திடலில் உள்ள ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வீரர்களும் உடனடியாக திடலை விட்டு வெளியேற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை மேற்கொண்டது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ஜம்மு - காஷ்மீரின் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு வருவதும், இந்தியா அதனை வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.