முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.

News image

ஐபிஎல் கோப்பை - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :20 மே 2025, 6:03 pm IST

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கின. மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இருப்பினும், அதில் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறிப்பிடப்படவில்லை.

அகமதாபாதில் இறுதிப்போட்டி

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் முல்லான்பூர் மற்றும் அகமதாபாதில் நடத்தப்படவுள்ளன.

மே 29 மற்றும் மே 30 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டி முல்லான்பூரில் நடத்தப்படவுள்ளது. ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடத்தப்படவுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே சின்னசுவாமி திடலில் நடைபெறவிருந்த கடந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், வருகிற மே 23 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டி பருவமழை காரணமாக லக்னௌ திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இதற்கு முன்பாக கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அகமதாபாதில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டும் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெறவுள்ளது.

முன்னதாக பிளே ஆஃப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.