கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.

News image

ரிஷப் பந்த் - படம் | AP

Updated On :20 மே 2025, 3:40 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.

லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு லக்னௌ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.

இருப்பினும், ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 100-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தில்லி கேபிடல்ஸுக்காக அறிமுகமான ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் தொடரே மிகவும் மோசமான ஐபிஎல் தொடராக அமைந்துள்ளது.

மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் தனக்கு சிறப்பானதாக அமையவில்லை என ரிஷப் பந்த்தான் முதலில் கூறினார் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு சீசன் ரிஷப் பந்த்துக்கு சரியாக அமையவில்லை என்பதை அவர்தான் முதலில் கூறினார். ஆனால், கிரிக்கெட்டில் இதுபோன்ற காலக்கட்டங்களும் இருக்கும் என்றே கூறுவேன். ரிஷப் பந்த் மிகவும் அற்புதமான வீரர் என்பது நமக்குத் தெரியும். அவர் மிக அதிக திறமைகளைக் கொண்ட வீரர். அதனால், அவர் விரைவில் மீண்டும் ஃபார்முக்கு வருவார். கடைசி இரண்டு போட்டிகளில் அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவிப்பார் என நம்புகிறேன்.

அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பங்களிப்பை வழங்குகிறேன். கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி அணிக்கு வெற்றி பெற்றுத் தர விரும்புகிறேன். ஐபிஎல் மிகவும் போட்டி நிறைந்த தொடர். இந்த சீசனில் சில போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம். அந்த தோல்விகள் எங்களுக்கு சிக்கலாக அமைந்துவிட்டது என்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.