ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உலக முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.
கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல பிரபலங்கள் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்து கூறினார்கள்.
பிகார் முதல்வர் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அளித்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யவன்ஷி தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினாட். 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர், சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து சூர்யவன்ஷி கூறியதாவது:
நான் ஏன் அழப்போகிறேன்? ஆட்டமிழந்தபோது திரையைப் பார்த்தேன். அதில் இருக்கும் அதிகப்படியான வெளிச்சத்தினால் எனது கண்கள் வலித்தது.
கண்களை அதிகமாக சிமிட்ட வேண்டியிருந்தது. அதனால் கண்ணைத் தேய்த்துவிட்டேன். அதைப் பலரும் நான் அழுததாக நினைத்தார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

பும்ராவின் முதல் ஓவரை அடித்து என் மீதான அழுத்தத்தை சூர்யவன்ஷி நீக்கினார்: ஜெய்ஸ்வால்

உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை திணறடித்த வைபவ் சூர்யவன்ஷி: சஞ்சய் பங்கார்

ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

