மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அவரது 150-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடி வருகிறது.
150-வது போட்டியில் ஹார்திக் பாண்டியா
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டி ஹார்திக் பாண்டியா விளையாடும் 150-வது ஐபிஎல் போட்டியாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமின்றி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஹார்திக் பாண்டியா விளையாடியுள்ளார். இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா 2,686 ரன்கள் குவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹார்திக் பாண்டியா மிகவும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கும் மும்பை அணி தகுதி பெற்றுவிட்டது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


