விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மே காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

அஜிங்க்யா ரஹானே - படம் | ஐபிஎல்

Published On :

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மே காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 14 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதன் மூலம், 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடம் பிடித்து நடப்பு ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறைவு செய்துள்ளது.

சிறப்பாக அமையாததன் காரணம் என்ன?

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையாததற்கான காரணத்தை அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்கள் அணியில் 3-4 பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையை கையாளும் அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சீசனில் வலுவாக திரும்பி வருவோம் என்றார்.

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்த ரிங்கு சிங், ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.