காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :30 மே 2025, 4:36 pm IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், முதல் அணியாக ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோல்வி குறித்து யோசிக்காதீர்கள்

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டி சிறப்பானதாக அமையவில்லை. ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில், குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்த்து, குவாலிஃபையர் 2 போட்டிக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் குவாலிஃபையர் 1 போட்டி குறித்து அதிகம் யோசிக்காமல், குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆட்டத்தின் முதல் ஓவரை நன்றாக தொடங்கினோம். அதன் பின், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஜீரணிப்பதற்கு கடினமாக இருந்தாலும், இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு குவாலிஃபையர் 2 போட்டியில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

குவாலிஃபையர் 2 போட்டி நாளை மறுநாள் (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அல்லது குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளது.

குவாலிஃபையர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.