திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல: ஷ்ரேயாஸ் ஐயர்

குவாலிஃபயர் 1-இல் ஆர்சிபியுடனான தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதாவது...

News image

ஷ்ரேயாஸ் ஐயர் - படம்: ஏபி

Updated On :30 மே 2025, 12:15 pm IST

ஆர்சிபி உடனான குவாலிஃபயர் 1-இல் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சண்டையில்தான் தோற்றிருக்கிறோம் போரில் அல்ல என தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

முல்லான்பூரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய ஆர்சிபி 10 ஓவர்களில் 106/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதாவது:

பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது

இந்தநாளை மறக்க முடியாது. ஆனால், மீண்டும் டிராயிங் போர்ட்டுக்கு சென்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்தப் போட்டியில் கற்பதற்கு அதிகமாக இருக்கிறது.

உண்மையில், என்னுடைய முடிவுகளுக்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திட்டமிட்டவை எல்லாமே சரியாக இருந்தது. அதைச் செயல்படுத்துவதில் தவறிவிட்டோம்.

இந்த மாதிரியான குறைவான இலக்கை கட்டுப்படுத்துவது கடினம். அதனால், பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது.

சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல!

குறிப்பாக இந்தமாதிரியான ஆடுகளத்தில் நாங்கள் பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். நாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்த பிட்ச்சில் மாறுபட்ட பௌன்சர்கள் இருந்தன.

என்ன இருந்தாலும் தொழில்முறை வீரர்களாக நாங்கள் தோல்விக்கு இந்தமாதிரி காரணங்களைக் கூறக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியிருக்க வேண்டும். சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல எனக் கூறியுள்ளார்.

எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியுடன் பஞ்சாப் அணி ஜூன் 1ஆம் தேதி மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.