தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க... ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டி டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 20) தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

கிரிக்கெட் ரசிகர்கள். - படம்: பிடிஐ.

Updated On :19 மே 2026, 12:04 pm IST

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 20) தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இந்தியா முழுவதும் உள்ள 14 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை, லக்னௌ அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இரண்டாவது அணியாக ஹைதராபாத் அணி தேர்வாகியிருக்கிறது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு பஞ்சாப், குஜராத் அணிகள் கடுமையாக மோதும் நிலையில், நேற்றிரவு நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கியிருக்கிறது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பிளே-ஆஃப் தொடருக்கான டிக்கெட்டுகள் நாளை இரவு 7 மணிக்குத் தொடங்கும் என்றும், டிஸ்ட்ரிக் செயலி மூலமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாலிஃபையர் 1 போட்டி – மே 26 ஆம் தேதி தரம்சலாவிலும், எலிமினேட்டர் 1 போட்டி மே 27 ஆம் தேதி நியூ சண்டீகரிலும் நடைபெறுகிறது.

குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் 1 போட்டிக்கான டிக்கெட்டுகள் வரும் 20, 21 ஆம் தேதிகளிலும், குவாலிஃபையர் 2, இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 22, 23 ஆம் தேதிகளில் https://www.iplt20.com உள்ளிட்ட தளங்களில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Board of Control for Cricket in India (BCCI) on Monday announced the ticket sale schedule for the TATA Indian Premier League (IPL) 2026 Playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.