ருமேனிய நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பதக்கம் மறுக்கப்பட்டதால் ஒலிம்பிக் நிறைவு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அந்நாட்டுப் பிரதமர் மார்செல் சியோலாகு தெரிவித்துள்ளார்.
ருமானியா நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு போட்டி முடிந்து வெண்கலப் பதக்கம் வாங்கவிருப்பதற்கான கொண்டாட்டத்தில் இருந்தபோது அமெரிக்க வீராங்கனை ஜோர்டன் சைல்ஸ்-ன் பயிற்சியாளர்கள் நடுவர்களிடம் புள்ளிகள் குறித்து மேல்முறையீடு செய்தனர்.
இதனால், சைல்ஸ் 0.1 கூடுதல் புள்ளிகள் பெற்று பார்போசுவின் புள்ளிகளை முந்தினார். எனவே, புள்ளிப்பட்டியலில் பார்போசு அடுத்த இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
தான் வெண்கலப் பதக்கம் வென்றதாக நினைத்த பார்போசு, கைகளில் ருமேனியக் கொடிகளை ஏந்தியபடி இருந்தார். புள்ளிப்பட்டியலில் கடைசியாக ஏற்பட்ட மாறுதலைக் கண்ட அவர், கொடியைக் கீழே போட்டுவிட்டு கண்ணீருடன் வெளியேறினார். அனா பார்போசு மற்றும் அவரது சக வீராங்கனை சப்ரினா மனேகா வொய்னா ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, “எங்கள் நாட்டு வீராங்கனைகள் ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவமானகரமாக நடத்தப்பட்டத்தைத் தொடர்ந்து, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளேன். நேர்மையாகப் பெற்ற பதக்கத்தை மேல்முறையீட்டின் மூலம் திரும்பப் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ”உங்கள் அர்ப்பணிப்பும் கண்ணீரும் எந்தப் பதக்கத்தையும் விட மேலானது. அதற்காக நமது நாடு முழுவதும் உங்களுக்குத் துணை நிற்கும்” என்று வீராங்கனைகளை ஊக்கப்படுத்துமாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போட்டி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற முறையால் நடந்த தவறால் உலகம் முழுவதுமுள்ள பல கோடி மக்களும் நமது ருமேனிய மக்களைப் போல அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். நான் இதுகுறித்து மேலும் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால், தங்களின் முழுமையான தகுதியை நிரூபித்த ருமேனியப் பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக எனது எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்ய விரும்புகிறேன்” என பிரதமர் மார்செல் சியோலாகுகூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அசைக்கமுடியாத மனோதிடம்... முதல் பதக்கம் வென்றவருக்கு மோடி புகழாரம்!

ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: கொல்லிமலையில் மலைப்பாதை சீரமைப்பு

மகளிா் நலச்சங்க வெள்ளி விழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

19.7.1976: ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் - பிரிட்டிஷ் அரசி எலிஸபெத் துவக்கினார்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




