குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் யார்?

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை பதக்கம் வென்றது.

மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் - படம்: எக்ஸ்

Published On :30 ஜூலை 2024, 9:07 pm IST

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை பதக்கம் வென்றது.

நடப்பு ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சரப்ஜோத் சிங்குடன் களமிறங்கி இரண்டாவது பதக்கம் வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் (10 மீட்டர்) சரப்ஜோத் சிங், போராடி தோல்வி அடைந்திருந்தார். எனினும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பதக்கங்களுடன் மானு பாக்கர் -  சரப்ஜோத் சிங்

பதக்கங்களுடன் மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் - படம்: எக்ஸ்

சரப்ஜோத் சிங் யார்?

ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் தீன் பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜோத் சிங். இவரின் தந்தை ஜிதேந்தர் சிங் விவசாயி. தாயார் ஹர்தீப் கெளர். சண்டிகரில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பயிசியாளர் அபிஷேக் ராணாவிடம் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றார்.

இவர் தன்னுடைய சிறு வயதில், கோடை கால விடுமுறையில் இருந்தபோது சக நண்பர்கள் துப்பாக்கி வைத்து விளையாடியதைக் கண்டு துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டார்.

13வது வயதில் கால்பாந்தாட்ட வீரர் ஆக வேண்டும் என்ற கனவு கண்ட சரப்ஜோத் சிங், காலப்போக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மெருகேறினார். 2014-ல் தனது தந்தையிடம் சென்று துப்பாக்கி வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த விளையாட்டு விலைமதிப்புமிக்கது என்று, அவரின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்தார் சரப்ஜோத் சிங். அதன் விளைவாக துப்பாக்கி சுடுதலில் தனது குடும்பத்தை உயர்த்தியுள்ளார் அவர்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதே அவரின் முதல் சர்வதேச வெற்றி.

இதுவரை இவர் வென்ற பதக்கங்கள்: உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கம் வென்றுள்ளார். 3 உலகக் கோப்பை பதக்கம், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம், 2 வெள்ளி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளார்.

தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.