குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய ஹாக்கி அணி

Published On :30 ஜூலை 2024, 7:18 pm IST

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அயர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றிபெற்றது.

மொத்தமாக மூன்று லீக் போட்டிகளில் ஆடிய இந்திய அணி இரண்டில் வெற்றியும், ஆர்ஜென்டீனா அணிக்கு எதிரானப் போட்டியில் டிராவும் செய்திருந்தது.

மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று(ஜூலை 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 11, 19-வது நிமிடத்தில் 2 கோல்கள் அடித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் போட்டிகளில் அணிகள் ஒருவொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும்.

மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

காலிறுதிஉ போட்டிகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்றும், அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்றும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.