ராஜ்கோட் டெஸ்ட்: விராத் கோலியின் கவனமான ஆட்டத்தால் போட்டி 'டிரா' !

ராஜ்கோட் :  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விராத் கோலியின் கவனமான ஆட்டத்தால் போட்டி ட்ராவில் முடிவடைந்தது.
ராஜ்கோட் டெஸ்ட்: விராத் கோலியின் கவனமான ஆட்டத்தால் போட்டி 'டிரா' !

ராஜ்கோட் :  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விராத் கோலியின் கவனமான ஆட்டத்தால் போட்டி ட்ராவில் முடிவடைந்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட்டில்  கடந்த 9-ந்தேதி தொடங்கியது. டாசில்வெற்றி பெற்ற  இங்கிலாந்து அணி பேட்டிங்கைத்  தொடங்கியது. 

அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில்,  முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர், பின்னர் கடைசியில் அஸ்வின் 70 ரன்கள் எடுக்க இந்தியா 488 ரன்கள் குவித்து 'ஆல் அவுட்' ஆனது.

பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்த நிலையில் அந்த அணி தனது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணிதலைவர் குக் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் பெற்ற  49 ரன்களையும் சேர்த்து இங்கிலாந்து 309 ரன்கள் முன்னிலை பெற்றது. எனவே இந்தியாவுக்கு 310 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய ஆடுகளங்களில் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு ஓவருக்கு 6 ரன்கள் அடிப்பது கடினம் என்பதால் போட்டியை டிராவுக்கு நகர்த்தும் நோக்கத்துடன் முரளி விஜயும், காம்பீரும் இந்தியாவின் 2-வது இன்னிங்சை தொடங்கினார்கள்.

ஆட்டத்தின் 2-வது ஓவரில் காம்பீர் ரன்ஏதும் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஆனால் அணியின் ஸ்கோர் 47 ரன்னாக இருக்கும்போது புஜாரா 18 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தி்ல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்கள். முரளி விஜய் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே 1 ரன் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். விராட் கோலியுடன் அஸ்வின் இணைந்து நிதானமாக விளையாடினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த ஜோடி போட்டியை டிராவில் முடித்துவிடும் என்று நமபிக் கொண்டிருக்கையில் அஸ்வின் 32 ரன்கள் எடுத்த நிலையில் அன்சாரி பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த சகா 9 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால் மறுமுனையில் விராட் கோலி உறுதியாக விளையாடினார்.

7-வது விக்கெட்டுக்கு கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியா 6 ஓவர்களை தாக்குப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் 6 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடினார்கள். குரிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தங்களுடைய கோட்டா ஓவர்களை இங்கிலாந்து வீசி முடித்ததால், கூடுதலாக       3 ஓவர்கள் வழங்கப்பட்டது.

கடைசி 3 ஓவரையும் னர். கடைசி ஓவரின் 3-வது பந்தில் விராட் கோலி ஒரு ரன் அடிக்க அதன்பின் 3 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற முடியாது என்பதால் இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனால் ராஜ்கோட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

அந்த மூன்று ஓவர்களையும் விராட் கோலி, ஜடேஜா ஜோடி சிறப்பாக சமாளித்தது. இறுதியில் இந்தியா தனது  2-வது இன்னிங்சில் 52.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 49 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com