ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்ற பிறகு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷ்ப் பந்த் பேசியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்க்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 225 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறினாலும் இந்தப் போட்டியில் 220 ரன்கள் எடுத்தும் தோல்வியுற்றது பேசுபொருளாகியுள்ளது.
தோல்விக்குப் பிறகு பேசிய லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆபாசமாகப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆங்கிலத்தில் எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாசமான வார்த்தையை உபயோகித்த ரிஷப் பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த், “புள்ளிப் பட்டியலோ அல்லது நாங்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும் நாங்கள் ஒரு அணியாகப் பெருமைப்படுகிறோம். இந்த அணி மீது நம்பிக்கையாக இருக்கிறோம்.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் நாங்கள் (எஃப் என்ற எழுத்தில் தொடங்கும் ஆபாசமான வார்த்தை) நல்ல அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றார்.
Summary
We are fucking good team controversy eruputs for Rishabh Pant last night speech
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: லக்னௌ பயிற்சியாளர்

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி




