திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளக்கமளித்துள்ளார்.

News image

ஆயுஷ் பதோனி - படம் | லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எக்ஸ்)

Updated On :20 ஏப்ரல் 2026, 4:24 pm IST

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தோல்விக்கு இது ஒன்றுதான் காரணம் என எதையும் குறிப்பிட்டு கூறுவது மிகவும் கடினம் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: லக்னௌ அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். தோல்விக்கு இது ஒன்றுதான் காரணம் என குறிப்பிட்டு கூறுவது மிகவும் கடினம். அணியில் சில இடங்களில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குகிறோம்.

மிட்செல் மார்ஷுடன் ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. டாப் ஆர்டர் எந்த ஒரு அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என நினைத்தோம். டாப் ஆர்டர் சுதந்திரமாக விளையாடி ரன்கள் குவித்தால் , மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடுவார்கள். அதன் காரணமாகவே ஆயுஷ் பதோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார் என்றார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

முந்தைய போட்டிகளில் லக்னௌ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Team captain Rishabh Pant has explained why Ayush Badoni was sent out as an opener in the match against Punjab Kings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.