பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!
/

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகல்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

ரிஷப் பந்த் - படம் | லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எக்ஸ்)

Updated On :29 மே 2026, 6:24 pm IST

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். லக்னௌ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த்துக்கு முதல் சீசன் சிறப்பாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனும் லக்னௌ அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் லக்னௌ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ரிஷப் பந்த் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த வேண்டுகோளை ஏற்று அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லக்னௌ அணியின் இயக்குநர் டாம் மூடி கூறியதாவது: லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் ரிஷப் பந்த் வேண்டுகோள் வைத்தார். அவரது இந்த முடிவை மதித்து அணி நிர்வாகம் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மாதிரியான முடிவுகள் ஒருபோதும் எளிதாக இருக்கவில்லை என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் 312 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

An official announcement has been issued stating that Rishabh Pant is stepping down from the captaincy of the Lucknow Super Giants.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.