அசார் அலி முச்சதம்: வலுவான நிலையில் பாகிஸ்தான்!
தொடக்க வீரர் அசார் அலி 469 பந்துகளில் 2 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 302 ரன்கள் குவித்தார்.


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி 469 பந்துகளில் 2 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 302 ரன்கள் குவித்தார்.
துபையில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி முச்சதம் அடித்தபிறகு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...