ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2016, 6:45 pm

DIN

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை சிவம் ஆனந்த் அடித்தார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய இந்திய அணியில் தில்பிரீத் சிங் 32-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 46-ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பின் மூலம் 3-ஆவது கோலை அடித்தது இந்தியா. இந்த கோலை நீலம் சஞ்ஜீவ் அடித்தார்.
அதேநேரத்தில் மறுமுனையில் சரிவிலிருந்து மீள்வதற்கு போராடிய பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் கோல் மட்டுமே கிடைத்தது. இந்த கோலை அந்த அணியின் அம்ஜத் அலி கான் (63-ஆவது நிமிடம்) அடித்தார். வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது இந்தியா. அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.