வலியுடன் விளையாடினாலும் அனுதாபம் தேடவில்லை: முரளி விஜய்

மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்க்கு சமீபத்தில் லண்டனில் அறுவை சிகிச்சை...
வலியுடன் விளையாடினாலும் அனுதாபம் தேடவில்லை: முரளி விஜய்
Updated on
1 min read

மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்க்கு சமீபத்தில் லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். 

13 ஹோம் டெஸ்டுகளில் 12-ல் விளையாடிய விஜய், தற்போது சென்னை திரும்பியுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து கூறியதாவது:

காயம் குறித்த விவரங்களுக்கு நான் செல்லவில்லை. ஆனால் ஹோம் சீசனில் மணிக்கட்டுக் காயத்துடன்தான் விளையாடினேன். இதனால் என்னால் எல்லா ஷாட்களையும் விளையாடமுடியவில்லை. இது என் பேட்டிங்கைப் பாதித்தது. என்னுடைய உடல் மொழியில் இருந்து நான் காயத்தில் அவதிப்பட்டதை உங்களால் கண்டுபிடித்திருக்கமுடியாது. காயத்தைக் காண்பித்து அனுதாபம் தேட முயலவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com