புணே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நல்ல தொடக்கம்!

முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
புணே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நல்ல தொடக்கம்!
Updated on
1 min read

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் இன்று தொடங்கியது. தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பிடித்தார்.

ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக விளையாடினார் தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பக்குவமாக விளையாடினார் வார்னர். 

15-வது ஓவரில் வார்னரை அற்புதமாக கிளின் போல்ட் செய்தார் ஜெயந்த் யாதவ். ஆனால் அது நோ பால் என்பதால் தப்பிப் பிழைத்தார் வார்னர். 

இதன்பிறகு பெரிய ஆபத்தின்றி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

அடுத்த ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார் கேப்டன் விராட் கோலி. அப்போது திருப்பம் ஏற்பட்டது. 38 ரன்களில் வார்னரை க்ளீன் போல்ட் செய்தார் யாதவ். ஆனால் அடுத்தப் பந்திலேயே ரென்ஷா ரிரையர் ஹர்ட் முறையில் 36 ரன்களில் மைதானத்தை விட்டு வெளியேறினார். வயிற்று வலி தொடர்புடைய உடல்நலக் குறைவால் அவர் வெளியேறியதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்மித், மார்ஷ் என புதிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை உருவானது.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ், ஸ்மித் ஆகிய இருவரும் தலா 1 ரன்னில் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com