வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ரஹானேவுக்கு கோலி பாராட்டு!

அஜிங்க்ய ரஹானே இடம்பெறும்போது இந்திய அணி சமபலம் கொண்டதாக இருக்கிறது. அதனால் கூடுதல் பெளலருடன் களமிறங்க முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 ஜூன் 2017, 7:07 pm

DIN

அஜிங்க்ய ரஹானே இடம்பெறும்போது இந்திய அணி சமபலம் கொண்டதாக இருக்கிறது. அதனால் கூடுதல் பெளலருடன் களமிறங்க முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதில் சதமடித்த ரஹானேவைப் பாராட்டிய கோலி மேலும் கூறியதாவது: ரஹானே, சில காலமாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். முன்வரிசையில் களமிறங்கி பெரிய அளவில் ரன் குவிக்கக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. அவர் எப்போதுமே எங்கள் அணியின் மாற்று தொடக்க வீரராக திகழ்கிறார்.
இந்தத் தொடரின் இரு ஆட்டங்களிலுமே ரஹானே சிறப்பாக பேட் செய்தார். தலைசிறந்த டெஸ்ட் பந்தய வீரரான ரஹானே, இப்போது ஒரு நாள் போட்டியிலும் முத்திரை பதித்து வருகிறார். அவர் நெருக்கடியை எளிதாக கையாள்வதோடு, ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறார்.
மிடில் ஆர்டரிலும் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்கக் கூடியவராக இருக்கிறார் ரஹானே. அதனால் 2019 உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளில் இந்திய அணி கூடுதல் பெளலருடன் களமிறங்கும் வாய்ப்பு ஏற்படும். கிரிக்கெட்டில் இரட்டை பங்களிப்பு செய்யக்கூடியவர்கள் மிகவும் அரிதுதான். ரஹானேவால் தொடக்க வீரராக மட்டுமின்றி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்க முடிகிறது என்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவைப் பாராட்டிய கோலி, "குல்தீப் யாதவின் பந்துவீச்சு இரு புறமும் சுழலக்கூடியதாகும். அவருடைய பந்துவீச்சை நான் ஐபிஎல் போட்டியின்போது எதிர்கொண்டுள்ளேன். இந்த ஆட்டத்தில் அவர் பந்துவீசிய விதத்திற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.