சாதனை வெற்றிக்குப் பிறகு ராம்குமார் ராமநாதன் தோல்வி!

மிகுந்த போட்டி மனப்பான்மையுடன் நடைபெற்ற இப்போட்டியில் ராம்குமார் ஐந்து மேட்ச் பாயிண்டுகளை...
சாதனை வெற்றிக்குப் பிறகு ராம்குமார் ராமநாதன் தோல்வி!
Updated on
1 min read

துருக்கியில் நடைபெற்று வரும் அண்டல்யா ஓபன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் தரவரிசையில் 222-ம் இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், மார்கோஸ் பக்டடிஸிடம் தோல்வியடைந்தார். மார்கோஸ், 7-6, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

மிகுந்த போட்டி மனப்பான்மையுடன் நடைபெற்ற இப்போட்டியில் ராம்குமார் ஐந்து மேட்ச் பாயிண்டுகளை எதிர்கொண்டார். இருப்பினும் அவரால் தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை. இந்தப் போட்டி 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றது.

ஒற்றையர் போட்டிகளில் இந்திய வீரர்கள் பெரிதளவில் முன்னேற்றம் காணாத ஒரு சூழலில் ராம்குமார் அசாத்தியமான ஒரு வெற்றியைப் பெற்று கவனம் ஈர்த்தார். இப்போட்டியின் முந்தைய சுற்றில், உலக அளவில் எட்டாம் நிலையில் உள்ள டொமினிக் தீமைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இருப்பினும் ராம்குமாரால் காலிறுதியைத் தாண்டிச் செல்லமுடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com