பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

காயத்திலிருந்து மீண்டு வந்தார் ரோஹித் சர்மா: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் ரோஹித் சர்மா இடம்பிடிப்பாரா?

News image
Updated On :1 மார்ச் 2017, 10:37 am

விசாகப்பட்டினத்தில் அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகினார். அவருடைய காயம் குறித்து லண்டன் மருத்துவர்கள் ஆராய்ந்தார்கள். லண்டனில் அவருடைய வலது தொடைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தற்போது காயத்திலிருந்து மீண்டுவந்து முழு உடற்தகுதி அடைந்துள்ளதாக ரோஹித் சர்மா ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். மார்ச் 4, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் ரோஹித் சர்மா இடம்பிடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.