சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாதது ஏன்? தேர்வுக்குழு விளக்கம்

வருங்காலத்தில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார்...
சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாதது ஏன்? தேர்வுக்குழு விளக்கம்
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பெரிய அதிர்ச்சிகள் எதுவும் இல்லை. ஏற்கெனவே இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரர்களே இதிலும் இடம்பெற்றுள்ளார்கள்.

அதேசமயம், மிகவும் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடமில்லை. ஆனால், இவர்களிருவரோடு சுரேஷ் ரெய்னா, ஷர்துல் தாகுர், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களும் மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எந்த வீரருக்காகவது காயம் ஏற்பட்டு விலக நேர்ந்தால் இவர்களில் இருந்து ஒருவர் உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.

இந்திய அணியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறியதாவது: ரிஷப் பந்த்தை இந்தப் போட்டிக்கு எங்களால் தேர்வு செய்யமுடியவில்லை. இந்திய அணிக்குள் அவரை எங்களால் நுழைக்கமுடியவில்லை. அந்த அளவுக்கு மற்ற வீரர்கள் அணிக்குள் சரியாகப் பொருந்தியுள்ளார்கள். வருங்காலத்தில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com